2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் கண்காணிக்க முடியாது என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு நேற்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, பாஜக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தெரிந்தே கட்சியில் சேர்க்கிறது. ஆனால், 2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் பூதக்கண்ணாடி வைத்து கண்காணிக்க முடியாது. அதே வேளையில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எங்களுக்கு தெரிந்தால் அவர்களை சேர்க்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம்.
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். பாஜக எதை வேண்டுமானாலும், சொல்லலாம், நடப்பதை தான் பார்க்க வேண்டும். பாஜக முதலில் 3 சதவீதத்தை தாண்டட்டும், அப்புறம் 30 சதவீதத்திற்கு போகலாம். ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் தமிழகத்தில் உதயசூரியனை யாரும் மறக்க முடியாது.
அதிமுக எம்பிக்கள் காணாமல் போனதை தற்போது தேடி கொண்டுள்ளனர். எங்கள் எம்பிக்கள் மக்களோடு தான் இருக்கின்றனர். எங்கள் எம்பிக்களை எங்க வேண்டுமானாலும் பார்க்கலாம். அதனால் அவர்கள் எம்பிக்கள் காணாமல் போனதை தற்போது சீட்டு கொடுப்பதற்காக தேடிக் கொண்டுள்ளனர். சாந்தன் இறந்த நிலையில் சிறப்பு முகாமில் உள்ள மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்களும் வலியுறுத்துகிறோம்.
மிகப் பெரிய வெற்றியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். அவரோட உழைப்பால் தான் சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை அண்ணாமலை போன்றவர்கள் மூடி மறைக்க நினைத்தாலும், உதாசீனப்படுத்தினாலும் ,தமிழக மக்களின் இதயங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு தனி இடம் உண்டு, எனக் கூறினார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.