தஞ்சை : விவசாயிகள் புகார் அளிக்கும் பட்சத்தில் முறைகேட்டில் ஈடுபடு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். நேற்று திருவாரூர் மற்றும் தஞ்சையில் ஆய்வு கூட்டம் நடத்திய அவர், இன்று தஞ்சையில் ரேஷன் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தார்.
பின்னர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியின் 3 சாவிகளும் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தால் யார் முறைகேட்டில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.