2022-23-ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையின் அடிப்படையில் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை இந்து அறநிலை துறை அமைச்சர் மலையேறி ஆய்வு செய்தார்.
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறி ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.
கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதி பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் ஏழாவது மலையில் காட்சி அளிக்கிறார். அவரை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சாமி தரிசனம் செய்ய ஜனவரி முதல் வாரத்திலிருந்து மே இறுதி வாரம் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெள்ளிங்கிரி மலை ஏற வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் மீண்டும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது.
அதை தொடர்ந்து மீண்டும் பக்தர்கள் மலையேறி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அடிவாரப் பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மை ஆகியோரை வணங்கி ஆய்வு மேற்கொண்டு மலை ஏற துவங்கினார்.
இவருடன் பாதுகாப்பிற்காக வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு உடன் மேலும் அறநிலை துறை ஊழியர்கள் சிலர் உடன் சென்றனர். கடந்த 4 நாட்களாக மேற்கு மலைத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பொழிவு அதிகமாக உள்ளது.
இவ்வாய்வின் போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கோயிலின் தேவைகள் குறித்தும், பக்தரின் வசதிகள் குறித்தும், தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வரும் அடிப்படை தேவைகள் குறித்தும், அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்தும் பக்தர்கள் மற்றும் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் வெள்ளிங்கிரி மலைக்கு நடைபாதையாக சென்று மலைபாதைகளை பார்வையிட்டார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.