நான் ஜோசியக்காரன் நான் சொன்னால் பலிக்கும் நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம் நகர செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனம் நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார்.
இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்பந்தம் காரணமாக கூட்டணி கட்சிக்கு நாம் சீட்டுக்கள் தந்தோம் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும்,அவர் இறுதி மூச்சுவரையில் முதலமைச்சராக இருப்பார்.
நாம் ஐந்தாம் தலைமுறையை உருவாக்கி விட்டோம், யாராரோ, எதிர்க்கட்சிகள் நாங்கள் ஜோசியம் பார்த்து விட்டோம் ஸ்டாலின் எந்த காலமும் முதல்வராக ஆக முடியாது என சொன்னார்கள்.
ஆனால் நான் அன்றே சொன்னேன் முதலமைச்சராக முக ஸ்டாலின் வருவார் என்று. நான் சொன்னால் பலிக்கும் என் நாக்கு கருநாக்கு நானும் ஜோசியக்காரன் என் நாக்கை பாருங்கள் என கூறி தனது நாக்கை வெளியே நீட்டியவாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறிது நேரம் நின்றால் கூட்டத்தில் சிரிப்பொலி ஏற்பட்டது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.