Categories: தமிழகம்

கரூர் நெடுஞ்சாலைத்துறை ஊழல் விவகாரம்: கேள்வி எழுப்பிய அறப்போர் இயக்கம் மீது ரூ.5 கோடி மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

கரூரில் சாலை அமைப்பதில் நடந்த ஊழல் விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக கேள்வி எழுப்பியதற்கு ரூ.5 கோடி மானநஷ்ட வக்கீல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் போக்குவரத்து அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு: கரூரில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காக, 172 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டது. இதில், 130 கோடி ரூபாய்க்கான பணி ஒதுக்கீடு உத்தரவு, ‘சங்கரானந்த் இன்ப்ரா’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இதன் உரிமையாளர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்.சாலை அமைக்க தேவையில்லாத இடங்களுக்கும், அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் துாண்டுதலில், பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் நல்ல நிலையில் உள்ளன; அவற்றை சீரமைக்க தேவையில்லை.கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பெரும்பாலான டெண்டர், சங்கரானந்த்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பணி ஒதுக்கீடு உத்தரவு பெற்றபின், பல இடங்களில் எந்த பணியும் மேற்கொள்வது இல்லை. ஆனால், பணி முடித்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து, பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். கரூர் மாவட்டம், ஈசநத்தம் முதல், வீரியப்பட்டி, மண்மங்கலம், நன்னியூர்புதூர், புகளூர் சர்க்கரை ஆலை, சேலம் பைபாஸ் சாலை உட்பட பல்வேறு சாலைகள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்டுள்ளன. அங்கு, புதிதாகச் சாலைகள் அமைக்கு பணியோ அல்லது சீரமைக்கும் பணியோ தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை. அப்படியிருக்கையில், அதிகாரிகள் உதவியுடன் போடாத சாலைக்கு, 10 கோடி ரூபாய் அளவில் பில் எழுதி பணம் எடுக்கப்பட்டுள்ளது என புகாரளிக்கப்பட்டது.

இதுகுறித்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கரூரில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை போடாமல் ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுத்ததில் கோடிக்கணக்கில் நடந்த ஊழல் மற்றும் பிந்தைய நடவடிக்கைகயில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என்பது விசாரிக்கப்படுமா என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி இருந்தது.

இதனையடுத்து, தற்போது, அமைச்சருக்கு எதிராக கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.5 கோடி மானநஷ்ட வக்கீல் நோட்டீல் அனுப்பியுள்ளதாக அறப்போர் இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், அறப்போர் இதனை சட்டரீதியாக சந்திக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

4 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

5 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

6 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

6 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

7 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

7 hours ago

This website uses cookies.