ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர கரூரில் 41 நான்காவது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் ஒலிம்பியாட் மாதிரி ஜோதியை மாணவர்கள் எடுத்துச் செல்ல மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரணியை தொடங்கி வைத்து பேரணியுடன் நடந்து சென்றார்.
மாநகராட்சி அலுவலக தொடங்குகின்ற பேரணி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் திடலில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சதுரங்க போட்டியை முன் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர், மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் அவற்றுக்கு மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்பட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வளாகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது பொய்யான தகவல். இது எதிர்க்கட்சிகள் மற்றும் சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
வீடுகள், மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும்போது, எந்தவித மாதாந்திர வாடகை கட்டணமும் வசூலிக்கப்படாது. அடித்தட்டு மக்களுக்கு பதிப்புகளை வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் 37 விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தும் அதிமுகவினர் காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வை பற்றி பேசவில்லை, என்றார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.