போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவை சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டபட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து, பணி காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசு பணிகளை வழங்கினார்.
அதே போல பணியாளர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், நீண்டகால கோரிக்கையான பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணியானை வழங்கப்பட்டது. பெண்கள் பயணிக்கும் இலவச பேருந்துகள் 40 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 68 சதவீதம் பயணிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதியில் இருந்து விரைவில் 2 ஆயிரம் பேருந்து வாங்கப்பட உள்ளது. போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஆன்லைன் விண்ணப்பம் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளது.
57 இருக்கையாக இருந்த அரசு பேருந்து உட்காருவதற்கு இடையூறு இல்லாத அளவில் தற்போது புனரமைக்கப்படும் பேருந்துகளில் 52 இருக்கைகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 1400 பேருந்து புனரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. 20,000 பேருந்துகள் போடப்பட்டு வருகிறது. இதில் கடந்த காலங்களில் 7 ஆயிரம் பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.
இலவச பேருந்துகளில் நடத்துனர் மீது குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தவறை புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.