மத்திய பிரதேசம் போனால் கூட பிரதமர் என்னைப்பற்றிதான் பேசுகிறார் என்று கரூரில் நடந்த திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சேலம் இளைஞரணி மாநாட்டுக்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் 1 கோடியே 12 லட்சம் வழங்கியதற்கு அமைச்சர் உதயநிதி நன்றி தெரிவித்தார்.
அப்போது அமைச்சர் உதயநிதி பேசியதாவது :- அமலாக்கத்துறை, ஐ.டி, சி.பி.ஐ என பல பிரச்சனைகளை தாண்டி போராடி வருகிறது கரூர் மாவட்ட திமுக. திமுக இளைஞரணிக்கு வரலாற்று பெருமை உண்டு. இந்தியாவில் இளைஞரணியை உருவாக்கிய முதல் கட்சி திமுகதான்.
மதுரையில் நடந்த அதிமுக மாநாடு எப்படி நடத்த கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு. ஆனால், இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என்ற அளவில் சேலத்தில் நடக்க உள்ள திமுக இளைஞரணி மாநாட்டை மிகப்பெரிய அளவில் சிறப்பாக நாம் நடத்த வேண்டும். கரூர் மாவட்டத்தின் முதல் செயல்வீரர் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவர் இல்லையென்றாலும் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டம் நடந்து வருகிறது. அதுதான் அவரின் உழைப்பு.
சூழ்ச்சிகளால் சிறைக்குச் சென்ற செந்தில்பாலாஜி மீண்டு வருவார். விரைவில் உங்களை சந்திப்பார். நீட்டுக்கு எதிராக இதுவரை 60 லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளோம். நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், மத்திய அரசு விலக்கு அளிக்க மறுக்கிறது.
மத்திய பிரதேசம் போனால் கூட பிரதமர் என்னைப்பற்றிதான் பேசுகிறார். சனாதானம் குறித்து பேசியதற்கு என் தலைக்கு விலை வைத்தார்கள். மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஆனால், நான் கேட்க மாட்டேன். வாரிசு அரசியல் செய்வதாக என்னை பற்றி பேசுகிறார்கள். நான் பெரியாரின் கொள்கை வாரிசு. மோடியின் மிக நெருங்கிய நண்பர் அதானி. அதானியின் கையில் அனைத்தையும் தூக்கி கொடுத்து விட்டார் மோடி, எனக் கூறினார்.
இறுதியாக நடிகர் விஜய் ஸ்டைலில் மேடையில் குட்டிக்கதை ஒன்றை கூறிவிட்டு அமைச்சர் உதயநிதி தனது பேச்சை முடித்து கொண்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.