மினிவேன் டயர் வெடித்து விபத்து.. சாலையோரம் டன் கணக்கில் கொட்டிய தக்காளி.. சாக்குப்பையில் அள்ளிய மக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கல்வார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து நூறு பெட்டிகளில் 3 டன் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்று கொண்டிருந்தது.
மினி வேனை அரூரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (வயது 22) என்பவர் ஒட்டி வந்தார். கல்வார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த பொழுது திடீரென வேனின் பின்பக்க வலது பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கரூர் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நடுரோட்டில் கவிழ்ந்தது.
வேனில் இருந்த தக்காளிகள் அனைத்தும் ரோட்டில் கொட்டியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் வேனை நிமிர்த்தி சாலையோரம் நிறுத்தினர்.
கொட்டி கிடந்த தக்காளிகளை கல்வார்பட்டி கிராம மக்கள் சாக்கு பை மற்றும் கட்டை பைகளில் வீட்டுக்கு அள்ளி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
This website uses cookies.