தனது காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக தனது குடும்பத்தினருக்கு 15 வயது சிறுமி பாலில் தூக்க மாத்திரை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமி, மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால், அந்த வாலிபரை அவர்களின் குடும்பத்தினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமி படிக்கும் பள்ளியின் அருகில் அந்த இளைஞர் இருப்பதைக் கண்ட சிறுமியின் உறவினர், அவருடன் சண்டையிட்டுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையம் வரை சென்றதால், சம்பவ இடத்திற்கு நொளம்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வாலிபரையும், சிறுமியின் உறவினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி போலீசாருக்கும், சிறுமியின் உறவினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தனது தாய், பாட்டியுடன் வசித்து வரும் சிறுமி இரவு நேரங்களில் இருவருக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து நன்றாக தூங்க வைத்த பிறகு, சிறுமியுடன் அந்த வாலிபர் உல்லாசமாக இருப்பது தெரியவந்துள்ளது.
சிறுமிக்கு காதலனே தூக்க மாத்திரைகளை வாங்கி கொடுத்திருப்பதாகவும், செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.