தமிழகம்

வீட்டுக்குள் புகுந்து பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்.. கோர முகத்தை காட்டிய கானா பாடகர்!

சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியை தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

கணவரை பிரிந்து வாழும் நிலையில் இவரின் 15 வயது மகள் அவர் பணி செய்யும் பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 25 ம் தேதி வீட்டு பாடம் செய்திட வேண்டும் என வீட்டில் தங்கிய மாணவி வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பிற்பகலில் வீட்டு வாசலில் அழுதவாறு கைகளில் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார்.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லட்சுமியை செல்போனில் அழைத்துள்ளனர். அவர் வந்தவுடன் கட்டி அழுத மாணவி தன்னை குடிக்க தண்ணீர் கேட்பது போல் வந்த நபர் பலமாக தாக்கி பிளேடால் கைகளை அறுத்துவிட்டு பாலியல் பலத்காரம் செய்துவிட்டு சென்றதாக கதறியவாறு தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் செய்வதறியாது பெரும்பாக்கம் காவல் துறைக்கு தகவல் அளித்தார். வீடுபுகுந்கு பெண் பாலியல் பலாத்காரம் என்கிற தகவல் காவல் துறைக்கு சவால் விடும் விதமாக இருந்தால் உயர் காவல் அதிகாரிகள் அலறியடித்து தீவிர விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க உத்திரவிட்டனர்

இதனையடுத்து மாணவியை பல விதங்களில் விசாரிக்க வேண்டிய நிலையில் வழக்கும் கண்ணகி நகரில் உள்ள செம்மஞ்சேரி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

பெண் காவல் உதவி ஆய்வாளர் ஷோபியா தலைமையில் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பார்வையிட்டு மாணவியிடன் விசாரணை செய்தனர்.

மாணவியின் கையில் பிளேடால் கிழித்ததாக கூறிய நிலையில் வீட்டில் கண்ணாடி துண்டுகள் கிடைத்தது, மேலும் கையில் லேசான கிறல்கள் மட்டுமே இருந்தன.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரித்தபோது அங்குள்ள சந்தேகமான இளைஞர்களிடம் விசாரித்தனர்.

அப்போது யானை கவுனி பள்ளம் பகுதியை சேர்ந்த தினேஷ்(எ) காண்டு தினேஷ் என்பவன் தான் மாணவியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது,

இதனால் தினேஷை பிடித்து போலீசார் கிடுக்கு பிடி விசாரணையில் தினேஷ் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறை சென்று வந்ததும், துக்க நிகழ்வுகளுக்கு கானா பாடல்களை பாடி அதனை இண்டா கிராம் ஐ.டியில் பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டவர் என்பது தெரிய வந்தது.

யானை கவுனி அருகே செம்மஞ்சேரியில் மாணவியின் பாட்டி விடுக்கு சென்றபோது அங்குள்ள துக்க நிகழ்வில் பழக்கம் ஏற்பட்டு காண்டு தினேஷ் இன்ஸ்டா கிராம் ஐ.டியை மாணவி அவரின் அம்மாவின் ஸ்மார்ட் போன் மூலம் பின் தொடர்ந்துள்ளார்.

இந்த பழக்கத்தில் பெருமாக்கம் வந்த தினேஷ் சம்பவம் அன்று ஆசிரியை பள்ளி கிளம்பிய போது வீட்டின் கீழே இருந்து பார்த்துள்ளார்.

அம்மா சென்றவுடன் தினேஷ் மாணவியின் வீட்டிற்கு சென்றார், மாணவியும் அனுமதித்துள்ளார். அதன் பின்னர் ஒன்றாக தனிமையில் இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் மாணவியை கட்டாயப்படுத்தி தினேஷ் பாலியல் பலத்காரம் செய்துள்ளார். ஆனால் சம்பவத்தை உண்மையாக கூறாமல் மாணவி அவரின் அம்மாவிடம் பொய்யான தகவலை கூறியதால் அவரும் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தீவிர விசாரணையில் பள்ளிப் பருவத்தில் கூடா நட்பு கேடாக முடிந்தது. ஆனாலும் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோவில் கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அம்மாவிடம் உண்மையை மறைந்து பொய்யான தகவல் கூறி காவல் துறையினக்கு சவால் விடும் புகார் தெரிவித்த மைனர் மாணவின் உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில் மருத்துவ பரிசோதனை உட்படுத்தப்பட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

15 minutes ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

1 hour ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

2 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

15 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

15 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

17 hours ago

This website uses cookies.