தமிழகம்

மலையில் அதிசய புதையல்? கூடாரம் போட்டு தங்கிய கும்பல் : வேலூரில் அடுத்த பயங்கரம்!

வேலூர் அடுத்த அரியூர் அடுத்த சிவநாதபுரம் பகுதியில் 1500 அடி உயரம் உள்ள மலை பகுதி உள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் சிவன் கோவில் உள்ளது

இந்த கோவிலில் புதையல் இருப்பதாக சுற்றியுள்ள பகுதியினரால் அரசல் புரசலாக பேசப்பட்டு வருவது வாடிக்கையாகயிருந்த நிலையில் அந்த மலையின் மேல் உள்ள பாழடைந்த கோயில் சுவர்களில் உள்ள கற்களை யாரோ உடைப்பதாக அங்கு கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்ததும் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு தகவல் சென்றது.

இதையும் படியுங்க: பட்டுக்கோட்டை பள்ளி மாணவி உயிரிழப்பு.. பெற்றோர் திடீர் வாதம்!

இதனை அடுத்து இளைஞர்கள் மலையின் மேல் சென்று அங்கு கோவிலின் அருகே உள்ள இடத்தில் கூடாரம் அமைத்து மேலும் அக்கோயில் சுவர் அருகே சாரங்களைக் கட்டி அங்கிருந்த மலை கற்களை உடைத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்களை இளைஞர்கள் நெருங்கி வருவதை கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். விடாது துரத்திச் சென்ற இளைஞர்கள் அவர்களை அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்

பின்னர் இளைஞர்கள் அவர்களிடம் விசாரித்தபோது அந்த மர்ம நபர்கள் அனைவரும் முன்னுக்குப் பின் முரணாக ஏதேதோ கூறியுள்ளனர்

தொடர்ந்து அந்த இளைஞர்கள் விசாரிக்கையில் சிலர் பாண்டிச்சேரி சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என மாறி மாறி பதிலளித்துள்ளனர். தொடர்ந்து விசாரிக்கையில் வேலூர் கந்தனேரி பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் தான் தங்களை அழைத்ததாக கூறியுள்ளனர்.

மேலும் அந்த மர்ம நபர்கள் அங்கு கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்ததும் அவர்களிடம் பாறைகளை உடைக்க வைத்திருந்த மண்வெட்டி, உளி உள்ளிட்ட ஆயுதங்களை கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளனர்.

மேலும் அப்பகுதிக்கு சிவநாதபுரம் இளைஞர்கள் ஒரு சிலரே சென்றதால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்த மர்ம நபர்கள் சென்று விட்டுள்ளனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை

இது குறித்து இந்து அமைப்பினர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளனர் புகாரின் பிறகு அங்கு தங்கி இருந்த மர்ம நபர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? எதற்காக வந்து இங்கு கூடாரம் போட்டு தங்கி இருந்தனர் என்பது முழு விசாரணைக்குப் பிறகு உண்மை தன்மை தெரிய வரும் என போலீசார் மற்றும் வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது

புதையலைத் தேடி மலை மீது ஒரு கும்பல் கூடாரம் அமைத்து தங்கி இருந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…

27 minutes ago

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

13 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

14 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

15 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

15 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

16 hours ago

This website uses cookies.