கோவை மாவட்டம் சூலூர் நூர்பாலையில் தங்கி வேலை பார்த்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற காதலனை சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரில் உள்ள தனியார் நூற்பாலையில் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அவரது சகோதரருடன் ஊருக்கு செல்ல வந்த போது திடீரென காதலனுடன் சென்று மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அந்தப் சிறுமி மற்றும் அவருடைய காதலன் பவானியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (24) என்பவரையும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு கட்டுமான இடத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இருவரையும் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் 16 வயது சிறுமையை கணபதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். காதலன் தாமரைக் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அண்ணனுக்கு போக்கு காட்டி விட்டு பைக்கில் தப்பிச்சென்ற சிறுமியின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.