உடலில் கல் கட்டிய நிலையிலும்,வெட்டு காயங்களும் உள்ளதால் கொலையா என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நொச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.
இவரது சகோதரர் கந்தசாமி திருச்சியில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கந்தசாமி வீடு திரும்பவில்லை. இது குறித்து ரேணுகா தேவி அன்று இரவு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் அவரப்பாளையம் பகுதியிலுள்ள குட்டை அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று வயிற்றில் கல்லை கட்டிய நிலையில் மிதப்பதாக அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு இன்று தகவல் அளித்தனர்.
தகவலறிந்த சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் கிணற்றில் மிதந்த சடலம் கந்தசாமி என்பது தெரியவந்தது. காணாமல் போன கந்தசாமியின் சடலம் கிணற்றில் கிடந்துள்ளது.
மேலும் கந்தசாமியின் உடலில் வெட்டு காயங்கள் உள்ளதால் கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் போட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
This website uses cookies.