உடலில் கல் கட்டிய நிலையிலும்,வெட்டு காயங்களும் உள்ளதால் கொலையா என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நொச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.
இவரது சகோதரர் கந்தசாமி திருச்சியில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கந்தசாமி வீடு திரும்பவில்லை. இது குறித்து ரேணுகா தேவி அன்று இரவு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் அவரப்பாளையம் பகுதியிலுள்ள குட்டை அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று வயிற்றில் கல்லை கட்டிய நிலையில் மிதப்பதாக அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு இன்று தகவல் அளித்தனர்.
தகவலறிந்த சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் கிணற்றில் மிதந்த சடலம் கந்தசாமி என்பது தெரியவந்தது. காணாமல் போன கந்தசாமியின் சடலம் கிணற்றில் கிடந்துள்ளது.
மேலும் கந்தசாமியின் உடலில் வெட்டு காயங்கள் உள்ளதால் கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் போட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
This website uses cookies.