சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றிய மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை வரை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மதியம் 12 மணி நிலவரப்படி, சென்னையின் 20 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட 5 இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, காலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வெள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் உடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்கின்றனர்.
அதேபோல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 2,149 பணியாளர்கள், தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட மின்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை தொடரும் என்றும், சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நேற்றைய அறிவிப்பில் சென்னைக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.