தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வருகிற மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப் போகிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென்னிந்தியாவிற்கு மேல் மிகப்பெரிய கத்தி தொங்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதனைக் குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு 2026ஆம் ஆண்டு, மக்களவைத் தொகுதியை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறது. பொதுவாக இது மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தான் செய்யப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும். நாட்டில் ஒட்டுமொத்த எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்புதான் ஏற்படும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்தது. தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து, இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்பதை ஏற்க முடியாது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதா, இல்லையா என்பது குறித்து அதிமுக ஆலோசித்து அறிவிக்கும். வடக்குக்கு ஒரு நீதி, தெற்குக்கு ஒரு நீதி என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திமுக உடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸின் மாநிலத் தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை, “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை தமிழ்நாடு சரியாக பின்பற்றியது” எனக் கூறி, தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தி வாலாக்களாக மாற்ற முயற்சி.. திருமாவளவன் கடும் விமர்சனம்!
மேலும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிப்பதால் எந்த மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது” எனக் கூறினார்.
அதேபோல், பாஜக உடன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “சட்டம் – ஒழுங்கு பிரச்னையைக் கையாள முடியாததால் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை” எனக் கூறியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.