நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் 2 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் முக்கிய பிரதான கட்சிகள், தேர்தல் குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் 2 நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது. கமல்ஹாசனின் சிந்தனைகளோடும் , கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணியில் இணைவோம் 2 நிபந்தனைகளோடும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டணியை தான் பார்த்துக்கொள்வதாகவும், தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுமாறு கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.