மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. மாவட்ட ஆட்சியரால் உயிருக்கு ஆபத்து : பிரபல தொழிலதிபர் பகீர் புகார்!!!
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதி சிலை வைக்கும் விவகாரத்தில் தொழிலதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக திரை உலகின் தந்தை என்று போற்றப்படும் டி ஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அவரது வாரிசுதாரர்களால் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் கலைஞர் கருணாநிதி எம் ஜி ஆர் ஜெயலலிதா உள்ளிட்ட பிரபலங்கள் தமிழகத்திற்கு அடையாளம் காட்டியது அனைவரும் அறிந்ததே
மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவாக அதன் நுழைவாயில் இன்றளவும் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நினைவுச் சின்னம் அமைந்துள்ள 1350 சதுர அடி நிலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் விலைக்கு கேட்டதாகவும் அது குறித்து ஆலோசனை செய்து பதில் அளிப்பதாக நிலத்தின் உரிமையாளர் விஜய வர்மா கூறியுள்ளார்.
இதனிடையே தமிழக முதல்வரின் நன்மதிப்பை பெற சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நுழைவு வாயில் சின்னம் அமைந்த பகுதியை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறி அதிகாரிகளை பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுவதாக நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
அந்த இடத்தில் டி.ஆர் சுந்தரம் சினிமா எடுக்க பயன்படுத்திய உபகரணங்களை காட்சி பொருளாக வைக்க திட்டமிட்ட இருந்த நிலையில் கருணாநிதியின் சிலை வைப்பதற்காக நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலை வைக்க நிலம் கொடுக்காத காரணத்தினால் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பொறுப்பை மறந்து நான்காம் தர மனிதர்களை போன்று அராஜகப் போக்கில் ஈடுபடுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகத்தால் தங்களது குடும்பத்திற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.