மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. மாவட்ட ஆட்சியரால் உயிருக்கு ஆபத்து : பிரபல தொழிலதிபர் பகீர் புகார்!!!
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதி சிலை வைக்கும் விவகாரத்தில் தொழிலதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக திரை உலகின் தந்தை என்று போற்றப்படும் டி ஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அவரது வாரிசுதாரர்களால் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் கலைஞர் கருணாநிதி எம் ஜி ஆர் ஜெயலலிதா உள்ளிட்ட பிரபலங்கள் தமிழகத்திற்கு அடையாளம் காட்டியது அனைவரும் அறிந்ததே
மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவாக அதன் நுழைவாயில் இன்றளவும் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நினைவுச் சின்னம் அமைந்துள்ள 1350 சதுர அடி நிலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் விலைக்கு கேட்டதாகவும் அது குறித்து ஆலோசனை செய்து பதில் அளிப்பதாக நிலத்தின் உரிமையாளர் விஜய வர்மா கூறியுள்ளார்.
இதனிடையே தமிழக முதல்வரின் நன்மதிப்பை பெற சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நுழைவு வாயில் சின்னம் அமைந்த பகுதியை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறி அதிகாரிகளை பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுவதாக நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
அந்த இடத்தில் டி.ஆர் சுந்தரம் சினிமா எடுக்க பயன்படுத்திய உபகரணங்களை காட்சி பொருளாக வைக்க திட்டமிட்ட இருந்த நிலையில் கருணாநிதியின் சிலை வைப்பதற்காக நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலை வைக்க நிலம் கொடுக்காத காரணத்தினால் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பொறுப்பை மறந்து நான்காம் தர மனிதர்களை போன்று அராஜகப் போக்கில் ஈடுபடுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகத்தால் தங்களது குடும்பத்திற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.