மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது…பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது : திமுக அமைச்சர் திட்டவட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை தூர் வாருவதற்கு 95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பூசத்துறையில் தூர்வாரும் பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது. குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது. காலூன்ற முடியாது.
மோடியிடம் மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக மறைந்த தலைவர் கருணாநிதி புகழை யாராலும் மறைக்க முடியாது.
அவரது புகழை மோடிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் இன்றைக்கும் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்க கூடியதாக உள்ளது
இவைகள் மோடிக்கு தெரியாமல் போய் இருக்கலாம் அல்லது தெரிந்து மறந்து இருக்கலாம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரை மோடி உச்சரித்தாலும் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கப்போவது கிடையாது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு புறக்கணித்தது கிடையாது.
மத்திய அரசு திட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்பு குறைவு மாநில அரசின் பங்களிப்பு அதிகம் இருப்பினும் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது என கூறினார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.