பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை ஜீரோ என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்க: தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!
சமீப காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன் என புகழப்படும் பாபர் அசாம் தனது சமீபத்திய ஆட்டங்களில் நிலையான செயல்பாடைக் காணவில்லை.சாம்பியன்ஸ் கோப்பை தொடரில்,நியூசிலாந்து அணிக்கு எதிராக,81 பந்துகளில் அரைசதம் அடித்து,மெதுவாக விளையாடினார். இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், மொஹ்சின் கான் கூறியது பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டால்,விராட் கோலி ஒரு ஜீரோ.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை சரியாக திட்டமிடப்படவில்லை என்றும்,பாபரை மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாகவே ஆட வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.மேலும், பாகிஸ்தான் அணிக்கு சரியான திட்டமிடல்,அணிவகுப்பு,பயிற்சி முறைகள் இல்லை என்பதையும் குறிப்பிட்டார்.
மொஹ்சின் கானின் இந்த கருத்து இந்திய ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.ஏனெனில்,விராட் கோலி தற்போது ஒன்று நாள் கிரிக்கெட்டில் உலகிலேயே மூன்றாவது அதிக ரன்கள் குவித்த வீரர். விரைவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உள்ளார்.ஐசிசி போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய தோல்விகளுக்கு நேரடி காரணங்களை கண்டுபிடிக்காமல்,மொஹ்சின் கான் விராட் கோலியை குறிவைத்து விமர்சித்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.