Categories: தமிழகம்

ஈவு இரக்கமே இல்லாமல் மகள்களிடம் பாலியல் சீண்டல்.. வெளிச்சத்திற்கு வந்த தந்தையின் லீலைகள்: அதிர்ச்சி சம்பவம்!!

ஈவு இரக்கமே இல்லாமல் தான் பெற்ற இரண்டு மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காமக்கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் அரக்கோணம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி பார்த்திபன் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது .

மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் 9ம் வகுப்பும், இளைய மகள் 8 ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்நிலையில் தான் பெற்றெடுத்த இரண்டு மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தந்தை தன்னிடம் தவறாக நடக்கிறார் என்பதை அந்த சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளால் முழுவதுமாக உணர முடியவில்லை .

இதற்கு இடையே மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது தான் தன்னுடைய தந்தை தன்னிடம் தவறாக நடக்கிறார் என்பதை உணர்ந்து ஆசிரியர் ஒருவரிடம் அக்காள், தங்கை தெரிவித்துள்ளனர்.

அந்த ஆசிரியர் தைரியமாக மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட சமூக பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை என்பது தெரியவந்தது.

பின்னர் தந்தை மீது மகள் ஒருவர் அரக்கோணம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காமக்கொடூர தந்தையான கட்டட மேஸ்திரி பார்த்திபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்த போது எனக்கு எதுவுமே தெரியாது என்று கணவனுக்கு மனைவி வக்காலத்து வாங்கியுள்ளார்.

மேலும் நடக்கும் சம்பவங்கள் எதையும் வெளியில் சொல்லக்கூடாது என்றும் மனைவியை குடிபோதையில் அடிக்கடி கொடுமை படுத்தியுள்ளான்.

இதற்கு பயந்து கொண்டு மனைவி போலீசாரிடம் வாய் திறக்காதது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் காவேரிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

1 hour ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

2 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

3 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

3 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

3 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

4 hours ago

This website uses cookies.