Categories: தமிழகம்

ஈவு இரக்கமே இல்லாமல் மகள்களிடம் பாலியல் சீண்டல்.. வெளிச்சத்திற்கு வந்த தந்தையின் லீலைகள்: அதிர்ச்சி சம்பவம்!!

ஈவு இரக்கமே இல்லாமல் தான் பெற்ற இரண்டு மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காமக்கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் அரக்கோணம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி பார்த்திபன் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது .

மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் 9ம் வகுப்பும், இளைய மகள் 8 ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்நிலையில் தான் பெற்றெடுத்த இரண்டு மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தந்தை தன்னிடம் தவறாக நடக்கிறார் என்பதை அந்த சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளால் முழுவதுமாக உணர முடியவில்லை .

இதற்கு இடையே மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது தான் தன்னுடைய தந்தை தன்னிடம் தவறாக நடக்கிறார் என்பதை உணர்ந்து ஆசிரியர் ஒருவரிடம் அக்காள், தங்கை தெரிவித்துள்ளனர்.

அந்த ஆசிரியர் தைரியமாக மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட சமூக பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை என்பது தெரியவந்தது.

பின்னர் தந்தை மீது மகள் ஒருவர் அரக்கோணம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காமக்கொடூர தந்தையான கட்டட மேஸ்திரி பார்த்திபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்த போது எனக்கு எதுவுமே தெரியாது என்று கணவனுக்கு மனைவி வக்காலத்து வாங்கியுள்ளார்.

மேலும் நடக்கும் சம்பவங்கள் எதையும் வெளியில் சொல்லக்கூடாது என்றும் மனைவியை குடிபோதையில் அடிக்கடி கொடுமை படுத்தியுள்ளான்.

இதற்கு பயந்து கொண்டு மனைவி போலீசாரிடம் வாய் திறக்காதது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் காவேரிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

4 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

5 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

6 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

6 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

6 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

7 hours ago

This website uses cookies.