கோவை: கோவை புறநகர பகுதியில் குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே உள்ள குப்பைமேட்டில் மதுபான பாட்டில்களுடன், அட்டைப் பெட்டி ஒன்றில் ரூபாய் நோட்டுகள் கேட்பாரற்று கிடந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் 73 குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டாலும் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூலூர் கலங்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகில் உள்ள குப்பை மேட்டில் வைத்து சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களுடன் அட்டைப்பெட்டியில் ரூபாய் நோட்டுகளையும் மது பாட்டில்களை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
குப்பை மேட்டில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் கேட்பாரற்று கிடந்ததை அவ்வழியாகச் சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.