Categories: தமிழகம்

மொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்.. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி : அழுது புலம்பிய மூதாட்டி!

மொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்.. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி : அழுது புலம்பிய மூதாட்டி!

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காங்ககுப்பம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் திமுகவின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் உறவினராகும்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இருவரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மர்ம நபர் ஒருவர் காவல்துறையினருக்கும் தேர்தல் பறக்கும் படையினருக்கும் தேர்தலுக்காக பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக நடராஜன் என்பவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வருவாய் துறையினர் தேர்தல் பறக்கும் படையினர் காங்குப்பம் கிராமத்தில் உள்ள நடராஜன் என்பவர் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

அங்கு நடராஜன் என்பவர் வீட்டை தட்டி அரை மணி நேரம் கூப்பிட்டும் யாரும் கதவை திறக்காததால் பக்கத்து வீட்டில் ஏறி மொட்டை மாடி இறங்கிய காவல்துறையினருக்கு சுமார் 500 ரூபாய் பணக்கட்டுகள் ஐந்து கட்டுகள் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்த படிக்கட்டு கதவை உடைத்து அதிரடியாக உள்ளே இறங்கிய காவல்துறையினரைக் கண்டு நடராஜனின் மனைவி கூச்சலிட்டனர்.

பின்னர் கதவைத் திறந்து உள்ளே வந்த வருவாய்த்துறை நிறம் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித்துறையினர் வீடு முழுவதும் சோதனை செய்ததில், மொட்டை மாடியில் கிடைத்த பணம் 2.5 லட்சம் மற்றும் பீரோவில் இருந்த பணம் உள்பட 7.50 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கிராம மக்களிடம் விசாரணை செய்ததில் நடராஜன் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும் இவர் துரைமுருகனின் உறவினர் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தால் பல ஆண்டுகளாக பேசுவதில்லை எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

வீட்டிற்குள் இருந்த பணம் 5 லட்சம் வட்டிக்கு கொடுத்ததாகவே இருக்கட்டும் ஆனால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த 2.5 லட்சம் பணம் யாருடையது எப்படி மொட்டை மாடிக்கு எப்படி சென்றது என்று காவல்துறையினர் நடராஜன் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணம் திமுகவை சேர்ந்ததா அல்லது அதிமுகவை சேர்ந்ததா அல்லது பிஜேபி கட்சிக்கு சேர்ந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு திடீரென 50க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கிராமத்திற்குள் வந்ததால் கிராம மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

6 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

7 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

7 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

8 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

8 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

8 hours ago

This website uses cookies.