ஒகேனக்கல்: கோடை வெப்பத்தை தணிக்க ஒகேனக்கல் காவிரி ஆற்றில் துள்ளி குதித்து ஆனந்த குளியல் போடும் குரங்குகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை ரசிப்பதற்கும், அருவிகளில் குளிப்பதற்காகவும் தினமும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறை தினங்களை கொண்டாட குடும்பத்தோடு வருகின்றனர்.
மேலும் கோடை காலம் தொடங்கினாலே கோடை வெப்பத்தை தணிக்க கூட்டம் கூட்டமாக ஏராளமானோர் ஒகேனக்கல் சுற்றுலாதலத்திற்கு வந்து அருவிகள் மற்றும் ஆற்றில் குளித்தும், கோடை வெயிலின் தாக்கத்தை தணித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஒகேனக்கல் பகுதிகள் முழுவதும் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க காவிரியாற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பது போலவே அங்குள்ள குரங்குகளும் ஆற்றில் துள்ளிக் குதித்து விளையாடி ஆனந்த குளியல் போடுகிறது.
ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகள் வெயில் தாக்கத்தால் தண்ணீரில் இருப்பது இதமாக இருப்பதால் நண்பர்களோடு துள்ளி குதித்து விளையாடி பொழுதை கழிக்கின்றனர். சுற்றுலா பயணிகளை போலவே ஒகேனக்கல்லில் உள்ள குரங்குகளும் சக குரங்குகளோடு கட்டிப்பிடித்து விளையாடுவதும், கொஞ்சி மகிழ்வதும், தண்ணீரில் மூழ்கி, மூழ்கி எழுந்து விளையாடுவது என ஆனந்தமாக குளித்து கோடை வெப்பத்தை தணித்து வருகின்றது.
குரங்குகள் தண்ணீரில் மூழ்கி எழுந்து சக குரங்குலோடு கொஞ்சி விளையாடி, தங்களின் அன்பை வெளிப்படுத்துவது ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். கோடை வெயிலை சமாளிக்க ஒகேனக்கல் அருவியிலும், ஆற்றிலும் குளிப்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள குரங்குகளுக்கும் ஒரு சுகம் தான் என்பதை குரங்குகளின் இந்த ஆனந்த குளியல் காட்டுகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.