திருச்சி : சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில் 300 பச்சைகிளிகள் உட்பட 500 பறவைகள் மீட்டு வனத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி பாலக்கரை அடுத்துள்ள கீழப்புதூர் பகுதியில் குருவிக்காரன் தெருவில் உள்ள வீடுகளில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கிளிகள் பறக்க முடியாத வகையில் அதன் சிறகுகள் வெட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகளையும், 150க்கும் மேற்பட்ட முனியாஸ் என்ற பறவையும் பறிமுதல் செய்தனர். தமிழக வனத்துறை சட்டபடி இந்த வகை பறவைகளை விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசின் சட்டத்தை மீறி பச்சைக்கிளிகள் மற்றும் முனியாஸ் உள்ளிட்ட பறவைகளை விற்பனைக்காக வைத்திருந்த வீட்டின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், வெட்டப்பட்ட கிளிகள் சிறகுகள் வளரும் வரை பராமரிக்கப்பட்டு அதன்பிறகு வனப்பகுதிகளில் விடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.