தமிழகம்

2வது பிரசவத்திற்குச் சென்ற இருவர் பலி.. பதறிய பறிகொடுத்த சொந்தங்கள்.. தர்மபுரியில் நடந்தது என்ன?

தர்மபுரியில் இரண்டாவது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பழைய புது ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. விவசாயம் செய்து வரும் கோகுல கிருஷ்ணன், குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், சந்தியா 2வது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்து உள்ளார். இவர்கள் குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சந்தியாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

எனவே, மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உறவினர்கள், மருத்துவர் இருக்கிறாரா எனக் கேட்டு உள்ளனர். அதற்கு, மருத்துவர்கள் உள்ளனர் என்றும், உடனடியாக அழைத்து வாருங்கள் என்றும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, சந்தியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

அங்கு சந்தியாவுக்கு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தை இறந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், சந்தியாவிற்கு அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே, தாயையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பில், சந்தியாவை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை ஊழியர்கள் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: சினிமாவில் இருந்து விலகும் சூப்பர் ஸ்டார்… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!

பின்னர் இது குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

8 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

8 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

9 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

10 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

11 hours ago

This website uses cookies.