தமிழகம்

கழிவுநீர் தொட்டியில் துடிதுடித்த இரண்டு உயிர்கள்.. சிவகாசியில் மூண்ட சோகம்!

சிவகாசியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வந்தம், காகா காலனியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகள் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரிக்கு திருமணம் முடிந்து தர்ஷன் என்ற மகன் இருந்தார். இதனிடையே, குடும்பத் தகராறு காரணமாக, ராஜேஸ்வரி கணவனைப் பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தந்தை முத்தையா வீட்டின் அருகே கணேசன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதிலும், புதிய வீட்டிற்காக கழிவுநீர் தொட்டியும், மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கணேசன் அமைத்து வருகிறார். இதற்காக சுமார் 8 அடி ஆழத்தில் குழியும் தோண்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, சிவகாசியிலும் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இரு கழிவுநீர் தொட்டிக்காக அமைக்கப்பட்ட குழியில் தண்ணீர் நிரம்பி இருந்துள்ளது. இந்த நிலையில், சிறுநீர் கழிப்பதற்காக தர்ஷன் குழி அருகே சென்று உள்ளார்.

அப்போது, அச்சிறுவன் தவறுதலாக குழியில் விழுந்து உள்ளார். இதனால் எழுந்த சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டுச் சென்று பார்த்த தாய் ராஜேஸ்வரி, தனது மகனைக் காப்பாற்ற முயன்று உள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக தாயும், மகனும் அந்த குழியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்.. சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூன் உருக்கம்!!

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

37 minutes ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

2 hours ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

2 hours ago

தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!

ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…

2 hours ago

ஆண் நண்பரை கட்டிப்பிடித்து போட்டோ… ரச்சிதா மகாலட்சுமியால் ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…

2 hours ago

18 நாட்கள் செல்போனில் சிக்கிய பேராசிரியர்.. முக்கிய நபர் கைதானது எப்படி?

உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

2 hours ago

This website uses cookies.