குடவாசலில் நிலத் தகராறில் தாயும், மகனும் கடப்பாரையால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். கொலை செய்துவிட்டு, தப்பியோடிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செருகளத்தூர் கிராமத்தில் பாஸ்கர் என்பவரின் மனைவி அலங்காரமேரி (50), அவருடைய மகன் அஜய் (24). ஆகியோர் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரின் அண்ணன் மகன்கள் அன்பழகன் (40), செபஸ்டின் (35) இவர்களுக்கும், பாஸ்கரன் குடும்பத்துக்குமிடையே பூர்வீக இடம் தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்தது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அடிக்கடி இரண்டு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று மாலை பாஸ்கரனின் மனைவி அலங்காரமேரி, அவரது மகன் அஜய் ஆகியோரை கடப்பாறையால் குத்தி விட்டு அன்பழகன் மற்றும் அவரது தம்பி செபஸ்டியன் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த அலங்காரமேரி, அஜய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றிய குடவாசல் காவல்துறையினர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய இருவரையும் குடவாசல் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.