தமிழகம்

பெற்ற தாயே பிள்ளைகளின் படுக்கைக்கு அனுமதி.. தந்தையால் சிக்கிய மனைவியின் கள்ளக்காதலர்கள்!

சென்னையில், பெற்ற தாயே பிள்ளைகளை பாலியல் ரீதியாக உறவுகொள்ள அனுமதி அளித்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சையது (45) – பாத்திமா (38) தம்பதி. இதில், சையது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த தம்பதிக்கு 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், பாத்திமாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் முகமது ரபிக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் வங்கி ஊழியர் அப்துல் கலாம் (23) என்பவருடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தை அடுத்து, முகமது ரபிக்கும், அப்துல் கலாமும், பாத்திமாவின் இரண்டு மகள்களையும் காதலிப்பதாகக் கூறி உள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு சையது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகள் முதலில் படிக்கட்டும், அதன் பின் காதல், திருமணம் குறித்தெல்லாம் பேசிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், கணவரின் பேச்சை கேட்காத பாத்திமா, ரகசியமாக முகமது ரபீக்குடனும் அப்துல் கலாமுடனும் பேசி வந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், தனது மகள்களுக்கும் இருவரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து, இருவரும் பாத்திமாவின் மகள்களைக் காதலிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனக்கூறி தாயே மகள்களிடம் கூறியதால், இருவரையும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் இரவில் சையதிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பாத்திமா, இரண்டு இளைஞர்களையும் வீட்டுக்கு வரச்சொல்லி, தான் பெற்ற குழந்தைகளுக்கே பாலியல் தொல்லை அளிக்கச் சொல்லியிருக்கிறார். இதற்காக, அந்த இரண்டு இளைஞர்களிடமும் பாத்திமா பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தரமான சம்பவம் இருக்கு.!

காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டு, இரவில் இவ்வாறு நடந்து கொள்வது சிறுமிகளுக்கு தவறாக தெரிந்தது மட்டுமல்லாமல், இதற்காக இளைஞர்களிடம் தனது தாய் பணம் பெறுவதும் சிறுமிகளுக்கு உறுத்தவே, இதுகுறித்து 2 சிறுமிகளும் தங்களது அப்பாவிடம் கூறி உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சையத், பாத்திமாவைக் கண்டித்துள்ளார்.

மேலும் இளைஞர்கள் குறித்தும், தாய் பாத்திமா குறித்தும் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிகளின் தாய் மற்றும் முகமது ரபிக் மற்றும் அப்துல் கலாம் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

19 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

19 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

20 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

20 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

21 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

21 hours ago

This website uses cookies.