சேலம்: காடையாம்பட்டி அருகே குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபாகரன் (32). இவரது மனைவி மரகதம் (30). இவர்களது குழந்தைகள் செல்வகணபதி (7), கோகுலகண்ணன் (5).
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு அது முற்றியுள்ளது. இதில், பிரபாகரன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பிரபாகரன் வீட்டுக்கு வந்தபோது, மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அக்கம், பக்கம் தேடிப்பார்த்தபோது, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் மரகதம் மற்றும் இரு குழந்தைகளும் சடலமாக மிதந்தது தெரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி 3 பேரின் உடலை வெளியில் எடுத்தனர்.
இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், இரு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு மரகதமும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும், போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.