மேட்டுப்பாளையம் அருகே சட்டத்துக்கு புறம்பாக கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளைத் தின்ற பசுமாடு இறப்பு தாயைப் பிரிந்த கன்று குட்டி பரிதவித்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விதிமுறைகளை மீறி பவானி ஆற்றங்கரை கரையோரத்தில் கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளை தின்ற பசுமாடு உயிரிழந்ததால் தாயைப் பிரிந்த இரண்டு மாத கன்று குட்டி பரிதவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் மொத்த விற்பனை கூடங்கள் ஏராளமாக உள்ளது. இங்கு நாள்தோறும் கிழங்கு மண்டிகளில் மீதமாகும் உருளைக்கிழங்கு கழிவுகளை குழி தோண்டிபுதைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், ஒரு சில மண்டி உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் கழிவுகளை வாகனங்களில் கொண்டு சென்று மேட்டுப்பாளையம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி ஆற்றங் கரையோரத்தில் சமயபுரம் பகுதியில் கொட்டி வருகின்றனர்.
இதனால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் இந்த கழிவுகளை கால்நடைகள் மற்றும் பவானி ஆற்றில் நீர் அருந்த வரும் யானைகள், காட்டெருமைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உண்டு வருகின்றன.
இந்நிலையில் சமயபுரத்தைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் வளர்த்து வந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு ஒன்று, இந்த கழிவுகளை தின்றதால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பசு ஈன்ற இரண்டு மாதமே ஆன கன்று குட்டி, தாயின் உடலை பார்த்து கதறுவது, பார்ப்பவர்கள் நெஞ்சை பிழிவதாக உள்ளது.
இந்த கழிவுகளுடன் ஏராளமான நெகிழி காகிதங்களும் கலந்து இருப்பதால் இதை உண்ணும் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதுடன், மனிதர்களுக்கும் தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கொடுத்து குறித்து கிழங்கு மண்டி உரிமையாளர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பசுமாடு உயிரிழந்தது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே காவல்துறையும் அரசு அதிகாரிகளும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் உருளைக்கிழங்கு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.