தமிழகம்

’அவரு என் மாமனார்..’ மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்.. தகாத உறவால் விபரீதம்!

உத்தரப் பிரதேசத்தில் மாமனார், மருமகளின் கள்ளத்தொடர்பை அறிந்த மாமியாரின் தலையில் செங்கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கீதா தேவி (50). இவரது மகன் தீபக். இந்த நிலையில், இவரது கணவர், குர்கு யாதவ் என்பவருக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீதா தேவி வெளியே சென்றிருந்த நிலையில், மாமனாரும் மருமகளும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தை பார்த்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

அப்போது திடீரென வீட்டிற்குச் சென்று இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த கீதா தேவி, கையும் களவுமாக அவர்களைப் பிடித்துள்ளார். இதனை தீபக் மற்றும் அக்கம் பக்கதினரிடம் சொல்லிவிடுவேன் எனவும் மாமியார் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனாரும், மருமகளும் சேர்ந்து கீதா தேவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

இதன்படி, கீதா தேவியை வீட்டிற்கு வரவழைத்து, தனது மாமியாரின் தலையில் செங்கல் மற்றும் மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார் மருமகள். பின்னர், இந்தக் கொலையை மறைக்க மாமியாரின் சடலத்தை வீட்டின் கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு, அவரைக் காணவில்லை என நாடகமாடியுள்ளனர்.இதனையடுத்து, கணவர் தீபக்கிடம் தனது மாமியார் அடையாளம் தெரியாத நபருடன் பைக்கில் எங்கோ சென்றதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து கணவர் குர்கு யாதவ், வெள்ளிக்கிழமை கீதா தேவியை காணவில்லை என்று புகார் அளித்தார். விசாரணையைத் தொடங்கிய போலீசார், கடந்த சனிக்கிழமை காலை கழிவறை தொட்டியில் கீதாதேவியின் சடலத்தை மீட்டனர். ஆனால், தலையில் பலத்த காயம் காரணமாக அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கைது!

பின்னர், மாமனார், மருமகள், மகன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, மாமனார், மருமகள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

8 hours ago

This website uses cookies.