கரூர் : தாயும், 4 வயது மகனை உடம்பில் கயிறு துணியில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த கோடாங்கிபட்டி ஆச்சிமங்களம் கிராமத்தில் வசிப்பவத் அமிர்தலிங்கம், முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கனிஷ் என்கின்ற 4 வயது மகன் உள்ளான்.
முத்துலட்சுமி வீட்டில் தையல் இயந்திரம் வைத்து ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு துணிகள் தைத்து கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்துலட்சுமி தையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் பயன்படுத்தும் கட்டரை மகன் கனிஷ் கண்ணில் பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கனவே கண் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வரும் புதன்கிழமை அன்று மற்றொரு ஆப்பரேஷன் கண்களுக்கு செய்யப்பட உள்ள நிலையில் அவர்கள் மனமுடைந்து வீட்டில் சில நேரங்களில் அழுது கொண்டே இருந்துள்ளார்.
கடந்த ஒரு மாதங்களாக மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று இரவு 11.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய முத்துலட்சுமியும், அவரது 4 வயது மகனும் மாயமாகினர்.
இரவு முதல் அவரது கணவரும், அவர்களது உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்திருக்க கூடும் என சந்தேகித்துள்னர்.
இதனையடுத்து இன்று மதியம் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தாயையும், 4 வயது மகனையும் சடலமாக மீட்டனர்.
இதனை அடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயும், மகனும் உடலிலில் கயிறு துணியால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
This website uses cookies.