Categories: தமிழகம்

குடும்ப சண்டையால் 9 வயது மகளுடன் தெப்பக்குளத்தில் குதித்த தாய் : நெஞ்சை உறைய வைக்கும் பதற்றமான சிசிடிவி காட்சி!!

விருதுநகர் : குடும்ப பிரச்சனை காரணமாக 9 வயது மகளுடன் தாய் தெப்பக்குளத்தில் விழுந்து தற்கொலை செய்த சிசிடிவி காட்சிகளை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சார்ந்தவர் பழனிவேல் (வயது 29). இவரது மனைவி மகாலட்சுமி (வயது 29). இவர்களுக்கு கஜலட்சுமி என்ற ஒன்பது வயதில் மகள் உள்ள நிலையில் குடும்பத்தில் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் கோவிலுக்கு செல்வதில் கடந்த இரு தினங்களாக சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கணவன் பழனிவேல் மகாலட்சுமியை அடித்துள்ளார்.

இதில் மனவேதனையில் இருந்த மகாலட்சுமி தனது 9 வயது மகள் கஜலட்சுமி உடன் விருதுநகர் தெப்பக் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து இருவரின் சடலங்களும் மிதந்து வந்த நிலையில் மக்கள் கூட்டம் கூடியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மிதந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அருகே இருந்த கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ச்சி செய்தனர். இதில் நள்ளிரவு நேரத்தில் தாயும் மகளும் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மீது ஏறி உள்ளே குதித்து தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

38 minutes ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

1 hour ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

12 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

13 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

14 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

14 hours ago

This website uses cookies.