தமிழகம்

‘நான் ‘ பட பாணியில் தாயை ‘அந்த ‘ நிலையில் பார்த்த மகன்.. கோர்ட் அதிரடி!

மதுரையில் தாய் வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்ததை மகன் பார்த்ததால், மகனை தாய் கொடூரமாக கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி ஆனந்தஜோதி (30). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், ஆனந்தஜோதிக்கும், அதே ஊரைச் சேர்ந்த மருதுபாண்டி (24) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஆனந்தஜோதி அந்த இளைஞர் உடன் தனிமையில் இருப்பதை, அவரது 4 வயது மகன் ஜீவா பார்த்து விட்டான்.

எனவே, எங்கே தனது கணவரிடம் பார்த்ததை மகன் சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில், பெற்ற மகன் என பாராமல், ஜீவாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்து உள்ளார். ஆனால், விஷப்பூச்சி கடித்து மகன் மயங்கி விழுந்தாக தாய் ஆனந்தஜோதி குடும்பத்தாரிடம் கூறி உள்ளார். எனவே, உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்று பரிசோதித்து உள்ளனர்.

இதையும் படிங்க: உங்க ஆரோக்கியத்திற்கு சரியான காவல் தெய்வம் இது தான்…!!!

அப்போது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இருப்பினும், சிறுவன் இறப்பில் சந்தேகம் இருந்ததால் அருகிலுள்ள வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். இதன்பேரில், தந்தை ராம்குமார் வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்படி, முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆனந்தஜோதி மீது சந்தேகம் வலுத்ததால், தாயிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தகாத உறவால் பெற்ற மகனையே தாயே கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனிடையே ஆனந்தஜோதி, மருதுபாண்டி ஆகியோரை 2020 ல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை 5வது கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அரசுத் தரப்பில் வக்கீல் ராஜேந்திரன் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீதிபதி, ஜோசப்ராய் நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், குற்றம் உறுதி ஆனதால் ஆனந்தஜோதிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அதேபோல், மருதுபாண்டியை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

Hariharasudhan R

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

9 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

10 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

11 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

11 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

12 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

12 hours ago

This website uses cookies.