Categories: தமிழகம்

‘எம்புள்ள எங்கூட இல்லனாலும்…உயிரோட இருக்கட்டும்’: மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் அளித்த பாசத் தாய்..!!

கோவை: வால்பாறையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த தாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகன் ஹரிஹரன் (23). இவர் வால்பாறையில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் ஹரிஹரன் 16ம் தேதி பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், முன்னால் சென்ற வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ஹரிஹரனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அவரது தாயார் பழனியம்மாள், ஹரிஹரனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தார்.

மூளைச்சாவு அடைந்த இளைஞர், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சிலருக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

AddThis Website Tools
UpdateNews360 Rajesh

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

11 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

12 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

13 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

13 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

14 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

15 hours ago