Categories: தமிழகம்

ஆட்டோ ஓட்டி மகளை லண்டன் அனுப்பிய வைராக்கிய தாய்: மகளிர் தினத்தில் வழங்கப்பட்ட கௌரவம்!!

ஆண்கள் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து குடும்பத்தைக் கரையேற்றி வந்த காலகட்டத்தை கடந்து தற்போது பெண்களும் ஆட்டோ ஓட்டும் பணியில் இறங்கியுள்ளனர். காலத்தின் கட்டாயத்தில் ஓட்டுநர் வேலைக்கு பெண்கள் வந்தாலும், அதிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி குடும்ப சூழல் காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னமே ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தவர். வறுமையிலும் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த பாக்கியலட்சுமி தனது மகள்கள் இருவரையும் பட்டதாரிகளாக மாற்றியுள்ளார்.

அன்னையின் விடா முயற்சியையும், மகள்களை கரைசேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் பார்த்த இவரது மகள்கள் படிப்பை கெட்டியாகப் பிடித்து கரையேறியுள்ளனர். இதில் ஒருவர் லண்டனுக்கு சென்று படித்தும் முடித்துள்ளார். அன்பான இந்த அன்னைக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒரு அங்கீகாரம் வழங்கியுள்ளது கோவை அரசு கலைக்கல்லூரி.

மகளிர் தினத்தன்று இந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பாக்கியலட்சுமியின் விடா முயற்சியைப் பாராட்டி கோவை கொற்றவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாக்கியலட்சுமி தனது மகள்களை கரையேற்ற உழைத்தது குறித்தும் காணொலி ஒளிபரப்பப்பட்டது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

25 ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டுநராக வந்தபோது தன்னை அறுவறுப்பாகப் பார்த்த சமூகம், தற்போது விருது வழங்கி கவுரவிப்பதை எண்ணி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கிறார் பாக்கியலட்சுமி

தாய்க்கு மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று வசனங்கள் வெறும் வசனங்களாக இருப்பதில்லை என்பதை பாக்கியலட்சுமி போன்ற அன்புத்தாய்மார்கள் அனுதினமும் உணர்த்தி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

UpdateNews360 Rajesh

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

7 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

8 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

8 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

9 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

9 hours ago

This website uses cookies.