Categories: தமிழகம்

மகளின் உல்லாசத்தால் பறிபோன தாயின் உயிர் : துப்புரவு பணியாளர் கொலையில் திருப்பம்.. விலகிய மர்மம்.. சிக்கிய ஆண் நண்பர்!!

பழனியில் பெண் துப்புரவு பணியாளர் கொலையில் புதிய திருப்பமாக மகளுடன் தவறான தொடர்பில் இருந்த ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (வயது 55). பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே சென்று அன்னம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.

அப்போது இருதினங்களுக்கு பிறகு பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு அருகில் அன்னம்மாள் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடனடியாக கிராமத்தினர் பழனி தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.
மேலும் உடல் அழுகி நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனைக்காக அன்னம்மாளின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் உடனடியாக போலீசார் கொலையாளியை நெருங்க முடியவில்லை. இதனிடையே கிராமத்தில் உள்ள அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

துப்புரவு பணியாளரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க கோரி கிராம மக்களும், சில அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு தினங்களுக்கு உடலை வாங்க மறுத்த உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். போலீசார் பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அன்னம்மாளின் மகள் புவனா (வயது 27) மீது சந்தேகம் அடைந்த போலீசார் புவனாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர். புவனாவுக்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததும் அவர்களுடன் தொலைபேசியில் பேசி பழகி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து புவனாவின் ஆண் நண்பர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் புது ஆயக்குடியைச் சேர்ந்த கனகராஜ், அன்னம்மாளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கூலி வேலைக்குச் சென்று வரும் கனகராஜுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அன்னம்மாளின் மகள் புவனாவிடம் பழகி வந்ததும், விஷயம் தெரிந்து கனகராஜை அன்னம்மாள் எச்சரித்ததும் தெரிய வந்துள்ளது.

மகளை தன்னுடன் சேர்த்து வைக்கக் அன்னம்மாளை பலமுறை தொடர்ந்து வற்புறுத்தி வந்த கனகராஜ். இந்த நிலையில் கனகராஜ் அன்னம்மாளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். விறகு சேகரிக்க அதற்காக கம்மாய்க்கு அருகில் சென்ற அன்னம்மாளை நோட்டமிட்ட கனகராஜ் பின் தொடர்ந்து சென்று அன்னம்மாளை தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது.

கொலை சம்பந்தமாக கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்த பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மகளுடன் பழகிய நபரை எச்சரித்ததற்காக தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

26 minutes ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

51 minutes ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

53 minutes ago

டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!

திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…

2 hours ago

500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்

வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…

2 hours ago

ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…

2 hours ago

This website uses cookies.