இருசக்கர வாகனத்தின் மீது கேஸ் டேங்கர்லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கோவையில் இருந்து திருப்பூருக்கு நாகராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் பாலசுப்பிரமணியம் என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.
பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே வந்த போது கொச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த டேஙகர் லாரியின் இடது புறம் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நிலையிலும் லாரியின் சக்கரத்தில் சிக்கிய நாகராஜ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் பாலசுப்பிரமணியம் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் டேங்கர் ஓட்டுனர் செந்தில் ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
This website uses cookies.