இருசக்கர வாகனத்தின் மீது கேஸ் டேங்கர்லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கோவையில் இருந்து திருப்பூருக்கு நாகராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் பாலசுப்பிரமணியம் என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.
பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே வந்த போது கொச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த டேஙகர் லாரியின் இடது புறம் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நிலையிலும் லாரியின் சக்கரத்தில் சிக்கிய நாகராஜ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் பாலசுப்பிரமணியம் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் டேங்கர் ஓட்டுனர் செந்தில் ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.