கோவையில் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை லாலிரோடு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளானர்.
அவ்வப்போது நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் அளவு குறைவதால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது இரவு நேரங்களில் இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடுவதை கண்டறிந்தனர்.
பெட்ரோல் விலை உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் திருடர்களால் மேலும் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
This website uses cookies.