வாகன ஓட்டிகளே உஷார்… வேகம் விவேகமல்ல : இது மழைக்காலம்… தொடரும் சாலை விபத்துகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 11:51 pm

மழைக்காலம் துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சாலைகளில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் விபத்துகள் நடந்தவண்ணம் உள்ளது. வேலூர் அருகே மரம் விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. சாலையோரமாக பைக்கில் வந்த தந்தை மகன் இருவரும் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல மதுரையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை அருகே சுற்றுலா வாகனம், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது போன்ற விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் உஷாராக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதே அனைவரின் பொதுமித்த கருத்தாக உள்ளது,

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!