மீண்டும் ஒரு தாஜ்மகால்: தமிழகத்தில் அமைக்கப்பட்ட காதல் சாம்ராஜ்யம்:நெகிழ வைத்த கணவர்…..!!

Author: Sudha
12 ஆகஸ்ட் 2024, 1:26 மணி
Quick Share

உண்மைக்காதல் ஒரு போதும் அழிவதில்லை என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது ஒரு நிகழ்வு.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைமுத்து (75). சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா காலகட்டத்தின் போது மே மாதம் 15 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு விஜயா உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

மனைவி மீது அதீத பிரியம் வைத்திருந்த கோட்டைமுத்து, அவர் நினைவில் இருந்து மீள முடியாமல் இருந்து வந்துள்ளார்.தன் மனைவியின் அஸ்தியை எடுத்து வந்து திருவாடானை அருகே அவரது சொந்த ஊரான ஆதியூரில் ₹1 கோடி செலவில் அழகிய மணிமண்டபம் கட்டி உள்ளார்.

அங்கு மனைவிக்கு ₹7 லட்சத்து 50 ஆயிரத்தில் வெண்கலச் சிலை அமைத்துள்ளார். அந்த மணி மண்டபத்தின் உள்ளே கணவன், மனைவி கலந்து கொண்ட விசேஷங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அலங்கரித்துள்ளார்.

நேற்று இந்த மணி மண்டபம் திறக்கப்பட்டது. இதில் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள 18 பட்டி மக்களையும் அழைத்து அவர்களுக்கு அறுசுவை விருந்தும் வைத்து கூடவே அனைவருக்கும் வேட்டி சேலை தாம்பூல தட்டையும் அன்பளிப்பாக தந்து நெகிழச் செய்துள்ளார்.

கோட்டைமுத்து கூறுகையில், ‘‘எனது மனைவி விஜயா, குடும்பத்திற்காக உழைத்து அன்பையும், நல்ல பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரின் நினைவாக இந்த மணிமண்டபத்தை கட்டி உள்ளேன்’’ என்றார்.தாஜ்மகால் போலவே தன் மனைவிக்காக கணவனால் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் இது என ஊரார் புகழ்ந்து வருகின்றனர்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 281

    0

    0