கரூர் : தேர்தலுக்காக திமுகவினர் ஓட்டுக்கு பணம் தர உள்ளதாகவும், அதை பொதுமக்கள் வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று காந்தி கிராமம் தொழிற்பேட்டை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசியபோது, “கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழை சட்டசபைக்கும் தேர்தல் வர உள்ளது. எனவே இன்னும் 27 அமாவாசை மட்டுமே திமுக ஆட்சி இருக்கும். அதற்கு பிறகு திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.
வெறும் 3 சதவீத வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என்றார். இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் அதிமுக 200 இடங்களில் வெற்றிபெறும். பொய் சொல்லியே திமுக ஆட்சியைப் பிடித்தது” என்றார். மேலும் அவர் பேசுகையில், ’’ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க திமுகவினர் தயாராக இருக்கிறார்கள், பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’’ என்று கூறி வாக்கு சேகரித்தார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.