லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் மிக விமரிசையாக நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த மறுநாளே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா நயன்தாரா புது கன்டிஷன் போடுவதாக கூறப்படுகிறது.
அதாவது இனி படங்களில் ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
நடிகைகள் திருமணானதும் முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்வது புதிது அல்ல. ஏற்கனவே ஜோதிகா உள்ளிட்டோர் இதனை பின்பற்றியே வந்திருக்கின்றனர். திருமணம் ஆனதும் நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும் நிலையும் உள்ளது.
நயன்தாரா தற்போது கேரளாவில் இருக்கிறார். தன் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்ட பிறகு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் இந்தி படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார். நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.