அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடக்கும் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாகவும் கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் நடக்கும் பாதையில் சிலிண்டர்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் நகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் நகர் நல அலுவலர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் பேருந்து நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருக்கும்போது கடையில் வைத்திருந்த பலகை திடீரென்று ஆணையாளர் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனிருந்த அதிகாரிகள் பலகையை தடுத்து நிறுத்தியதால் நூலிலையில் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உயிர்த்தப்பினார்.
மேலும் ஆணையாளர் மீது பலகை விழுந்த நிகழ்வு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிளாஸ்டிக் குடோன்களில் நகராட்சி நிர்வாகம் சோதனை செய்தது அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஐந்து டன் அளவில் நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.