ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய நபர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று (நவ.20) வழக்கம்போல், கண்ணன் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் பணி காரணமாக இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த கண்ணன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்தவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், ஆனந்தன் அருகில் இருந்த JM 2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
மேலும், இந்த கொலை முயற்சிக்கு முன்விரோதமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதேபோல், பட்டப்பகலில் வழக்கறிஞர், அதிலும் நீதிமன்ற வளாகத்திலே அரிவாளால் வெட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
இதையும் படிங்க: பள்ளி மாணவியின் வாயை பொத்தி கூட்டு பாலியல்.. புதருக்குள் நடந்த கொடூர சம்பவம்!
அண்ணாமலை கண்டனம்: அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது.
சட்டம் அற்ற காடாக தமிழகத்தை மாற்றியதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்னைகளைத் திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது” என தனது எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.