திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டி பங்களாவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவரது மனைவி தமயந்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக உள்ளார்.
கோபிக்கும் அவரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலும் உள்ளது.
இந்நிலையில் தமயந்தி நேற்று வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல்லிற்கு வழக்கறிஞரை சந்திக்க தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அதே பேருந்தில் கோபியின் அண்ணனும் சென்று கொண்டிருந்தார். பேருந்து கோபால்பட்டி- வடுகபட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாங்கம் தமயந்தியை தான் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியதில் தலை துண்டானது.
இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர். இதைப்பார்த்த ராஜாங்கம் தப்பி ஓடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் எஸ்.பி.பாஸ்கரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் தப்பியோடிய ராஜாங்கத்தை சம்பவம் நடந்த 20 மணி நேரத்தில் கைது செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.