உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்!
மதுரை மாநகர் தத்தனேரி அருகே உள்ள பாக்கியநாதபுரம் ராஜீவ் காந்தி நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் தனது தந்தையுடன் வீட்டில் வசித்துவருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலை பார்த்துவந்துள்ளார்.
இந்நிலையில் கார்த்திக் தனது வீட்டில் அவரது உறவினரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சீதாராமதாஸ் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை (18) தங்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் கார்த்திக் மற்றும் உறவினரான செந்தில்குமார் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் இரவு அறையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது .
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது உறவினரான கார்த்திக்கின் தலையில் அருகில் இருந்த குக்கரை கொண்டு தலையில் அடித்துள்ளார். இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொல்லப்பட்ட கார்த்திக்
இதனையறிந்த செந்தில்குமார் அங்கிருந்து தப்பிய நிலையில் நேற்று கார்த்திக் அறையில் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து கார்த்திக்கின் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திகை கொலை செய்த அவரது உறவினரான செந்தில்குமார் ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் கொலை சம்பவம் ஒன்றில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளதும், செந்தில்குமார் அடிக்கடி கஞ்சா புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட செந்தில்குமார்
இதனிடையே கார்த்திக்கின் தந்தை அளித்த புகாரின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்த செல்லூர் காவல்துறையினர் கார்த்திக்கை கொலை செய்த செந்தில்குமார் என்ற இளைஞரை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் தனது அறையில் தங்க வைத்த உறவினரான இளைஞர் கஞ்சா போதையில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.