Categories: தமிழகம்

உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்!

உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்!

மதுரை மாநகர் தத்தனேரி அருகே உள்ள பாக்கியநாதபுரம் ராஜீவ் காந்தி நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் தனது தந்தையுடன் வீட்டில் வசித்துவருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் தனது வீட்டில் அவரது உறவினரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சீதாராமதாஸ் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை (18) தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்திக் மற்றும் உறவினரான செந்தில்குமார் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் இரவு அறையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது .

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது உறவினரான கார்த்திக்கின் தலையில் அருகில் இருந்த குக்கரை கொண்டு தலையில் அடித்துள்ளார். இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்ட கார்த்திக்

இதனையறிந்த செந்தில்குமார் அங்கிருந்து தப்பிய நிலையில் நேற்று கார்த்திக் அறையில் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து கார்த்திக்கின் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திகை கொலை செய்த அவரது உறவினரான செந்தில்குமார் ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் கொலை சம்பவம் ஒன்றில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளதும், செந்தில்குமார் அடிக்கடி கஞ்சா புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட செந்தில்குமார்

இதனிடையே கார்த்திக்கின் தந்தை அளித்த புகாரின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்த செல்லூர் காவல்துறையினர் கார்த்திக்கை கொலை செய்த செந்தில்குமார் என்ற இளைஞரை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் தனது அறையில் தங்க வைத்த உறவினரான இளைஞர் கஞ்சா போதையில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

11 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

12 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

12 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

13 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

13 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

13 hours ago

This website uses cookies.