Categories: தமிழகம்

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்..!!!

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மேலூர் ரயில்வே நிலையம் அருகில் கோமாஸ்புரம், ராஜுவ் நகரை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன் (வயது 26). சுமை தூக்கும் தொழிலாளி. அங்குள்ள ஒரு குடோனில் வேலை பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கி கல்லால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த முனீஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதன்பேரில் தூத்துக்குடி உட்கோட்ட நகர உதவி காவல் கண்காணிப்பாளர் கெல்கர் சுப்ரமணிய பால்சந்திரா உத்தரவின்பேரில், தெர்மல் நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் முதல் நிலை காவலர் சாமுவேல், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமணி ராஜன், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் முனீஸ்வரன் தாக்கிய தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சிவா ஆனந்த் (22), கிழக்கத்தியான் மகன் மந்திரமூர்த்தி (35) மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியை சேர்ந்த பிச்சைராஜ் மகன் ராம்குமார் (25) மற்றும் அவர்களது நண்பர் ஒருவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் இரவோடு இரவாக மூன்று பேரை பிடித்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட சிவ ஆனந்த் மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ராம்குமார் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என 4 வழக்குகளும், மந்திரமூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

1 minute ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

3 minutes ago

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

56 minutes ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

13 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

14 hours ago

This website uses cookies.