Categories: தமிழகம்

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்..!!!

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மேலூர் ரயில்வே நிலையம் அருகில் கோமாஸ்புரம், ராஜுவ் நகரை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன் (வயது 26). சுமை தூக்கும் தொழிலாளி. அங்குள்ள ஒரு குடோனில் வேலை பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கி கல்லால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த முனீஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதன்பேரில் தூத்துக்குடி உட்கோட்ட நகர உதவி காவல் கண்காணிப்பாளர் கெல்கர் சுப்ரமணிய பால்சந்திரா உத்தரவின்பேரில், தெர்மல் நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் முதல் நிலை காவலர் சாமுவேல், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமணி ராஜன், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் முனீஸ்வரன் தாக்கிய தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சிவா ஆனந்த் (22), கிழக்கத்தியான் மகன் மந்திரமூர்த்தி (35) மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியை சேர்ந்த பிச்சைராஜ் மகன் ராம்குமார் (25) மற்றும் அவர்களது நண்பர் ஒருவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் இரவோடு இரவாக மூன்று பேரை பிடித்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட சிவ ஆனந்த் மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ராம்குமார் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என 4 வழக்குகளும், மந்திரமூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

3 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

3 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

4 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

4 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

5 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

5 hours ago

This website uses cookies.