வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கிலிருந்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் விடுதலை சத்துவாச்சாரி நீதிமன்றம் விடுதலை வழங்கியது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கு தொடர்பாக வேலூர் சத்துவாச்சரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே சாட்சியங்கள் மற்றும் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இருதரப்பு வாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி அருண்குமார் மீண்டும் முருகனை 24.05.2022 ஆம் தேதி இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டதை அடுத்து இன்று முருகன் ஆஜரானர்.
இந்த நிலையில் அரசு தரப்பில் போதிய ஆதாரம் இல்லாததால் வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கிலிருந்து முருகன் இன்று விடுவிக்கப்படுவதாக ஜே.எம். 1 நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.